உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

தீயில் கருகி பெண் பலி

Published On 2023-09-22 08:27 GMT   |   Update On 2023-09-22 08:27 GMT
  • கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியை நகரை சேர்ந்தவர் விமலா (வயது 45) அதே பகுதியில் வீட்டில் சமைத்து எடுத்து சென்று அருகில் ஓட்டல் கடை வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி படுகாயம் அமைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News