உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்

Published On 2022-08-01 15:05 IST   |   Update On 2022-08-01 15:05:00 IST
  • 10 சதவீத ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டுகோள்
  • அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பத்தூர்:

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன்ரோட் டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

மாவட்ட தலைவர் ராசு தலைமை தாங்கினார் . சேகரன் , வேலாயுதம் முன்னிலை வகித்தனர் . மாநில செயற்குழு உறுப் பினர் கார்மேகம் வரவேற்றார் . ஜவர்கலால் நேரு தொடக்க உரை ஆற்றினார் . சிறப்பு அழைப்பாளராகமாநில செயலாளர் குரு சந்திரசேகரன் , மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி , கலந்து கொண்டு பேசினார்கள் .

மாவட்ட செயலாளர் ஏ.ஞானசேகரன் , தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் காசி , ரங்கன் , கேசவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள் . முடிவில் மாவட்ட இணை செய லாளர் இளங்கோவன் நன்றி கூறினார் .

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இதற் காகதமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்துவது , ஓய்வூதியர்க்கு 10 சதவீத ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் , ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

Tags:    

Similar News