உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2023-05-26 15:04 IST   |   Update On 2023-05-26 15:04:00 IST
  • உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதுப்பேட்டை ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் நீல நிற பனியன் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News