உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-10-20 15:01 IST   |   Update On 2022-10-20 15:01:00 IST
  • பெற்றோர் சம்பளம் கேட்டதால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் ராகுல் (வயது 24) இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ராகுல் கடந்த 14-ந் தேதி விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது பெற்றோர் ராகுலிடம் வேலை செய்து வாங்கிய சம்பள பணத்திற்கு கணக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராகுல் எலி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிழே விழுந்து கிடந்தார். அதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ராகுல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தந்தை லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News