உள்ளூர் செய்திகள்

மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-30 08:54 GMT   |   Update On 2023-05-30 08:54 GMT
  • செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா (வயது 17). ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது விடுமுறையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு சந்தோஷ் குமார் தனது மாமியார் வீடான ஜோலார்பேட்டை அருகே பால்னங்குப்பம் பகுதியில் உள்ள ராணி வீட்டிற்கு கடந்த 26-ந் தேதி வந்துள்ளார்.

அப்போது அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தந்தை சந்தோஷ்குமார் கண்டிதனர். இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். பாட்டி ராணி கடைக்கு சென்றார்.

வீட்டில் தனியாக இருந்த அதிசியா தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தந்தை சந்தோஷ் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News