உள்ளூர் செய்திகள்

கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்

Published On 2023-01-19 15:04 IST   |   Update On 2023-01-19 15:04:00 IST
  • ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத் தில் தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும். கடன் திட்டங்களான தனிந பர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்ப டுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமா யின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத் தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ் லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறு பான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக் குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந் துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். கல்வி கட னுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றி தழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத் திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் பொருளாதார மேம் பாட்டு கழகம் (டாப் செட்கோ) மூலம் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொது கால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்க ளுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்க டன், சிறு குறு விவசாயிகளுக் கான நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப் படும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த இரு திட்டங்களுக் கானலோன் மேளா திருப்பத் தூர் மாவட்டதில் உள்ள அனைத்து தாலுகா அலுவல கங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்பட உள்ளது. திருப் பத்தூர் தாலுகாவில் அடுத்த மாதம் 8-ந்தேதியும், நாட்டறம் பள்ளி தாலுகாவில் நாளை வெள்ளிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும் நடக்கிறது.

வாணியம்பாடி தாலுகாவில் வருகிற 24-ந்தே தியும், அடுத்த மாதம் 15-ந்தே தியும், ஆம்பூர் தாலுகாவில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 16-ந்தேதியும் முகாம் நடக்கிறது.இந்தமுகாம்களில் கலந்துகொண்டு விண்ணப் பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரி வித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 657 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 774 அட் டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது 99.43 சதவீத மாகும். தமிழகத்திலேயே 39 மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்ததற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டினார்.

Tags:    

Similar News