உள்ளூர் செய்திகள்

மாட்டு கொட்டகையில் செம்மரங்கள் பதுக்கல்

Published On 2023-07-01 15:16 IST   |   Update On 2023-07-01 15:16:00 IST
  • வனத்துறையினர் மீட்டனர்
  • வனத்துறையினர் மீட்டனர் பல லட்சம் மதிப்புடையது

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் கம்பிெகால்லை 7-வது தெருவில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆம்பூர் வனத்துறையினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி (விவசாயி) என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பு வைத்து இருந்தது. வனத்துறை அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை மீட்டனர்.

Tags:    

Similar News