உள்ளூர் செய்திகள்
- கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
- ரூ.85 ஆயிரம் வழங்கினர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே மாதனூரில் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் எம்.பி. மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சண்முகம், நினைவு அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.85 ஆயிரத்தை ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கன்னிப்பன் பரிமளா கார்த்திக் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.