உள்ளூர் செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி

Published On 2023-07-04 14:40 IST   |   Update On 2023-07-04 14:40:00 IST
  • முன்னாள் அமைச்சர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
  • உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி

திருப்பத்தூர்:

வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில், அவரது தனி உதவியாளர் பிரகா சம்மற்றும் விக்னேஷ், ராஜ்குமார், கவிதா பிரகாசம் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி திருப்பத்தூரை அடுத்த ஓமக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி தேவன் என்பவரிடம் ரூ.16 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் அரசு வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜானிடம், தேவன் மற்றும் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற் றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News