உள்ளூர் செய்திகள்
எருது விடும் விழா முன்னேற்பாடுகளை அதிகாரி ஆய்வு
- விதிமுறைகள் குறித்து ஆலோசனை
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டையை அடுத்த கல்நார் சாம்பட்டி கிராமத்தில் இன்று (புதன்கிழமை) எருதுவிடும் விழா நடக்கிறது. எருது விடும் விழாவிற்கான முன்னேற்பா டுகள் குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர்லட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழாவில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் கவுரி, கிராமநிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் பொதுப்ப ணித்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர், விழாக் குழுவினர் உடன் இருந்தனர்.