உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளியில் மழைமானி ஆய்வு

Published On 2023-10-05 07:21 GMT   |   Update On 2023-10-05 07:21 GMT
  • மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரி
  • சரியாக செயல்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் மழைமானியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் மழைமானிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News