உள்ளூர் செய்திகள்
சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மறியல்
- ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாக புகார்
- போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் இருந்து சுடுகாடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.