உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி அருகே பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்

Published On 2023-07-11 13:51 IST   |   Update On 2023-07-11 13:51:00 IST
  • 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஆ.பூசாராணி கூறினார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஆர்.சரவணன், ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா,பி.சந்தியா உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News