உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி ஒருவர் பலி

Published On 2022-11-30 15:26 IST   |   Update On 2022-11-30 15:26:00 IST
  • தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம் பெரியாங்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் குமார் (வயது53). இவர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News