உள்ளூர் செய்திகள்

மூதாட்டி திடீர் சாவு

Published On 2022-07-06 09:58 GMT   |   Update On 2022-07-06 09:58 GMT
  • 100 நாள் வேலையின்போது பரிதாபம்
  • போலீஸ் விசாரணை

வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெரியதாய் ( வயது 75 ). இவர் நேற்று வளையாம் பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஏரிப்பகுதியில் 100 நாள் பணி யில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சக பணியாளர்கள் உடனடியாக மூதாட்டியை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக வாணி யம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News