உள்ளூர் செய்திகள்

பட்டாசு தயாரிக்கும் இடத்தை தாசில்தார் திடீர் ஆய்வு

Published On 2023-03-19 09:08 GMT   |   Update On 2023-03-19 09:08 GMT
  • பாதுகாப்பு குறித்து சோதனை
  • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் கலைஞர் கருணாநிதி தெரு பகுதியில் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திருவிழாக்கள் சித்திரை மாதம் நடைபெறுவது யொட்டி அதற்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமையில் பாதுகாப்பு குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மேற்படி பட்டாசு தயாரிக்கும் அறைகளில் மின் இணைப்பு ஏதும் இல்லை. அனைத்து அறைகளும் நான்கு நுழைவுகள் உடன் நல்ல காற்றோட்டத்துடன் தீயணைப்பான் கருவியும் வைக்கப்பட்டு நல்ல பாதுகாப்பான முறையில் உள்ளன.

மேலும் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் இருந்து சுற்றி சுமார் 600 மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமில்லை என தெரிய வந்தது.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, மற்றும் கிராம உதவியாளர் வரதராஜ் உள்பட வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News