உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் அதிகாரி ஆய்வு
- பொது மக்களிடம் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
- அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியில் தாசில்தார் அலுவலகத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம் பொது இ- சேவை மையத்தில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் அலுவ லர்கள் அன்னலட்சுமி, கவுரி மண்டல துணை தாசில்தார் அரிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.