உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்றார்

Published On 2022-09-14 09:45 GMT   |   Update On 2022-09-14 09:45 GMT
  • தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்
  • மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

ஜோலார்பேட்டை:

33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 9-ந் தேதி முதல் துவங்கி 11-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற்றது.

ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள்.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா பிளஸ் 2 பயிலும் மாணவி பங்கேற்றார்.

16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்கேவிஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேற்று சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் தென்னிந்திய அளவில் ஜூனியர் தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News