உள்ளூர் செய்திகள்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
- அன்னதானம் வழங்கப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது.
கோவில் புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை அப்பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.