உள்ளூர் செய்திகள்

மடவாளம் மங்கநாதீஸ்வரர் கோவிலில் 61 அடி ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மடவாளம் அங்கநாதீசுவரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-12-13 09:39 GMT   |   Update On 2022-12-13 09:39 GMT
  • 850 ஆண்டு பழமை வாய்ந்தது
  • 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்கநாதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.

தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி நடைபெற்றது.

கணபதி பூஜை, தனபூஜை நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணஹூதி நடைபெற்றது தொடர்ந்து முதல் கால பூஜை, யாகவேள்வி, தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, மூன்றாம் நான்காம், கால பூஜை, தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாகயாக சாலையில் குடங்களில் புனித நீர் பூஜை செய்யப்பட்டு நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் 61 அடி உயரம் உள்ள ராஜகோபரத்தின் மீதும் அங்கன் அங்கநாதீஸ்வர் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக ஹர ஹர சிவாய நமக என கோஷமிட்டனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் க.தேவராஜ் எம்.எல்.ஏ, திருவண்ணாமலை அருனை மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் கம்பன், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவராஜன், சின்னப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் ஒன்றிய குழு உறுப்பினர் இளவரசி ரகு உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அங்கநாதீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வஜ்ரவேல் இந்து சமய அறநிலைத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News