உள்ளூர் செய்திகள்
- தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆம்பூர்:
மாதனூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் ப.ச.சுரேஷ்குமார் தலைமையில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் செலவினங்கள் குறித்த தீர்மானங்களுக்கு அங் கீகாரம் கோரப்பட்டது.
மேலும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். அதற்கு ஒன்றியக்குழு தலை வர் சுரேஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன், அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.