உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது

Published On 2023-03-29 15:18 IST   |   Update On 2023-03-29 15:18:00 IST
  • 55 லிட்டர் பறிமுதல்
  • ஜெயிலில் அடைத்தனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 43) என்பவர் குன்னத்தூர் அருகே மலையடிவாரத்தில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News