உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் தங்கம் வென்று சாதனை செய்த காட்சி.

ஜோலார்பேட்டை மாணவன் தங்கம் வென்று சாதனை

Published On 2022-08-03 14:46 IST   |   Update On 2022-08-03 14:46:00 IST
  • தேசிய அளவில் கராத்தே போட்டி
  • சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த சின்னகோடியூர், செவத்தான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மகன் தனுஷ் (வயது17).

இவர் ஜோலார்பே ட்டை யில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

தனுஷ் மாவட்ட, மாநில அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

மேலும் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று நேற்று சொந்த ஊர் திரும்பிய தனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் இவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஜம், கராத்தே பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News