உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்- மினி லாரி மோதல்

Published On 2023-02-13 15:31 IST   |   Update On 2023-02-13 15:31:00 IST
  • 8 பேர் காயம்
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

பெங்களூரில் இருந்து நேற்று முன் தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு, வேலுார் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

வாலாஜா பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (42) என் பவர் பஸ்சை ஓட்டி வந்தார். லட்சுமிபுரம் அருகே 6 வழிச்சாலையில் சென்ற போது, முன்னாள் வேகமாக சென்று கொண்டிருந்த மினிலாரி, தடுப்புச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.

அதேநேரம், பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மினிலாரி மீது மோதியது. இதில், பெங்களூர் பகுதியைச் சேர்ந்த மினிலாரி டிரைவர் வேலன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த ராஜேந்திரன், சுந்தரி, குமார், சந்தோஷ் முருகன் உட்பட 8 பேர் காய மடைந்தனர். அதே நேரம், பஸ்சிலிருந்த 25-க்கும் அதிகமான பயணிகள் காயமின்றி தப்பினர்.

விபத்து பற்றி தகவலறிந்த நாட்றம் பள்ளி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரித்த னர். பின்னர், விபத்தில் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News