உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ முகாம்

Published On 2023-05-22 16:08 IST   |   Update On 2023-05-22 16:08:00 IST
  • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை ஈரோட்டில் உள்ள மருத்துவமனை நடத்தி யது. முகாமை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.பிரகாஷ் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News