உள்ளூர் செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா

Published On 2023-06-26 13:57 IST   |   Update On 2023-06-26 13:57:00 IST
  • வருவாய் அலுவலர் ஆய்வு
  • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்றம்பள்ளி வீடற்ற மாற்று திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க பணியை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நாட்டறம்பள்ளி பகுதியில் மூக்கனூர், சந்திரபுரம், ஜெயபுரம், வெலக்கல்நத்தம் ஆகிய பகுதியில் அதிகளாவில் உள்ள வீடற்ற மாற்று திறனாளிகள் உள்ளனர்.

இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் லட்சுமி ஆய்வு செய்தார்.

அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய் அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News