உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

Published On 2023-09-24 14:25 IST   |   Update On 2023-09-24 14:25:00 IST
  • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் சின்னகுலமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). எலக்ட்ரீசியன். இவருக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ந் தேதி மாதவன் வேலை தொடர்பாக மோட் டார்சைக்கிளில் திருப்பத்தூ ரில் இருந்து திருவண்ணா மலை செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வெங்கடேஸ் வரா நகர் அருகே சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதையடுத்து மாதவன் நாய் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து, அவர் சாலையில் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Tags:    

Similar News