உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் இரு நடுகற்கள் கண்டுபிடிப்பு

Published On 2023-05-11 14:37 IST   |   Update On 2023-05-11 14:37:00 IST
  • 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
  • இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவமைக்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலத்துறை பேராசிரியர் வ.மதன் குமார், காணி நிலம் மு.முனிசாமி, திருப்பத் தூர் அரசு கலைக்கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் பல்லவன் ஆகியோர் ஏலகிரி மலையில் மேற்கொண்ட கள ஆய்வில் இரு நடுகற்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியதாவது:-

ஏலகிரிமலை சுற்றுலாத் தலத்திற்கு மட்டுமின்றி வரலாற்று சிறப்புக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. கற்கோ டாரிகள், கற்திட்டைகள், பல்லவர் காலம் முதல் விஜய நகர காலம் வரையிலான நடு கற்கள், கல்வெட்டுகள் என தொடர்ச்சியாக எங்கள் ஆய் வுக் குழுவினரால் கண்டறி யப்பட்டு வெளிப்படுத்தப் பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங் களில் ஒன்றான மேட்டுக்கனி யூர் என்னும் ஊரில் புதிதாக கூத்தாண்டவர் (அரவான்) கோவில் ஒன்றை அவ்வூர் மக் கள் கட்டி வருகின்றனர். அந்த கோவிலுக்கு இடதுபுறத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டி அதில் நடுகல் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.

இந்த தெய்வம் விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரில் வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு எடுக் கப்பட்டுள்ள நடுகற்கள் ஆகும். இவை ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடு கற்களாகும். இந்த நடுகற்க ளின் அமைப்பானது பிர மாண்டமான பலகைக்கல் ஒன்றில் வடிவமைக்கப்பட் டுள்ளது .4 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட அக்கல்லில் சரிபாதியாக இரண்டு வீரர்களின் உருவங் களும் வடிவமைக்கப்பட்டுள் ளன.

முதல் உடலின் உருவமா னது வலது கையில் பெரிய வில்லையும், இடது கையில் அம்பையும் பிடித்துள்ள கோலத்தில் உள்ளது. அலங்க ரிக்கப்பட்ட கொண்டை, மார்பில் அணிகலன்கள், இடையில் குறுவாளுடன் கூடிய அழகிய ஆடை வடிவ மைப்பு உள்ளது. 2-வது நடுகல்லும்வலதுகையில்வில், இடது கையில் அம்பு, அலங்கரிக்கப்பட்ட கொண்டை, இடையாடையில் குறுவாள் என வடிவ மைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நடுகல் வீரர் கள் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் தாங்கி இருப்பர். இந்த நடுகற்கள் சற்று வித்தியாசமாக வலது கையில் வில்லும், இடது கையில் அம்பினையும் வைத் துள்ளன. ஒரே போர்க்களத் தில் தம் ஊரைக்காக்க நடந்த போரில் உயிர் விட்ட வீர மறவர்களை தெய்வங்களாக ஏலகிரிமலை மக்கள் வழிபடு வது சிறப்புக்குரியது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News