உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2023-04-19 15:27 IST   |   Update On 2023-04-19 15:27:00 IST
  • தண்டவாளத்தை கடக்கும் போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் துறையேறி மேல் தெருவை சேர்ந்தவர் தினகரன் (வயது 35) கட்டிட தொழிலாளி.

நேற்று காலை தினகரன் கேத்தாண்டப்பட்டி வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News