உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

Published On 2023-05-22 10:35 GMT   |   Update On 2023-05-22 10:35 GMT
  • 28 கிலோ சிக்கியது
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே திருநெல்வேலி ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் இருந்தது. அந்தப் பைகளை சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பயணிகளிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பை யாருடையது என்பது தெரியவில்லை. ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

திருநெல்வேலி போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் இரண்டு பைகளில் இருந்த கஞ்சாவை ஒப்படைத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கஞ்சாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News