உள்ளூர் செய்திகள்
- 3 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில யஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பொது பெட்டியில் பயணிகளின் உடமைகள் வைக்கும் ரேக்கில் கேட்பாரற்று கிடந்த கருப்பு கலர் சோல்டர் பேக் சோதனை செய்ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா கடத்திதது யார் என்று தெரியவில்லை இது குறித்து ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர்.