உள்ளூர் செய்திகள்
- 3 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரை கடந்து வாணியம் பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர்.
சோதனையின்போது பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று தோல் பை கிடந்தது. அதனை சோதனை செய் ததில் 1 பண்டலில் 3 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் பையை யார் கொண்டு வந்தது என்று தெரியாத தால் பையை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.