உள்ளூர் செய்திகள்

குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி

Published On 2023-05-10 09:44 GMT   |   Update On 2023-05-10 09:44 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
  • போலீசார் பந்தல் அமைத்து கண்காணிப்பு

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதைத்தொடர்ந்து நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வாகன சோதனை சாவடியில் போலீசார் பந்தல் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இத்தகைய சோதனைகளில் ஈடுபடுவதால் குற்றங்கள் தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News