உள்ளூர் செய்திகள்

முதியவரிடம் செயின் பறிப்பு

Published On 2023-06-14 08:45 GMT   |   Update On 2023-06-14 08:45 GMT
  • தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
  • கரும்பு ஜூஸ் வாங்குவது போல் நடித்தனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர், திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் கூடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கரும்பு ஜூஸ் பார்சல் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து மனோகரன் ஜூசை பார்சல் கட்டிக்ெகாண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 வாலிபர்கள் மனோகரன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மனோகரன் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவம் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News