உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் அருகே எருது விடும் விழா
- 200 மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
- போலீசார் பாதுகாப்பு பணி
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் இன்று காலை எருது விடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வாணியம்பாடி சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி டிஎஸ்பி சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு இடங்களில் இருந்து 200 மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்படடன. எருது விடும் விழாவில் உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.