பைக்குகள் மோதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
- மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மின்னூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). இவர் தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்கும், இவர் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அரவிந்தனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.