உள்ளூர் செய்திகள்
- கண்காணிப்பு கேமராவில் பதிவானது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.
நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.