உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து

Published On 2022-07-20 09:27 GMT   |   Update On 2022-07-20 09:27 GMT
  • முன்விரோதத்தால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள கட்டைமேடு பகுதியை சேர்ந்த ராம்கி வயது (33) ஆட்டோ டிரைவர்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரத் (34) ஆட்டோ டிரைவர் ஆகிய 2 பேருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.

அப்போது ராம்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாரத் மீது சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்தார் இவரை மற்ற ஆட்டோ டிரைவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாரத் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News