உள்ளூர் செய்திகள்

ஆதியூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம்

Published On 2022-12-03 08:59 GMT   |   Update On 2022-12-03 08:59 GMT
  • ரூ.12 லட்சத்தில் கட்டப்படுகிறது
  • பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கியது

திருப்பத்தூர்:

கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஒட்டி ஆதியூர் ஊராட்சி தங்கபுரம் கிராமத்தில் ரூ.12 லட்சத்தில் கட்ட பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ. பி. பழனிவேல் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார்.

புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை தொடங்கி வைத்து பேசினர்.

Tags:    

Similar News