உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்

Published On 2023-02-05 14:33 IST   |   Update On 2023-02-05 14:33:00 IST
  • 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது
  • இணை இயக்குனர் தகவல்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக் குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கந்திலி மற்றும் திருப்பத்தூர் வட்டாரங்களில் விவசாயிகளுக்கு தேவையான தார்பா லின்கள், தெளிப்பான்கள், கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, இரும்பு சட்டியுடன் பண்ணைக்கருவிகள் தொகுப்பு, ஜிப்சம், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்க லவை, பயிர்பாதுகாப்பு மருந் துகள், தென்னைக்கு இ L வேண்டிய போராக்ஸ், தக் கைப்பூண்டு விதைகள், உளுந்து விதைகள், காராமணி விதைகள் ஆகியவை மாநில வேளாண்மை வளர்ச்சித்திட் டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப் பட்டு வருகின்றது. சம்பா பருவ நெல் அறுடைக்குப்பின் பயறு வகைப் பயிர்கள் சாகு படி செய்யும் பொருட்டு உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றது.

தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்து மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், டி.கே.எம். 13, கோ 51 ஆகிய நெல் ரகங்களும், கேழ்வரகு விதைகளும் மானி யத்தில் வழங்கப்படுகின்றன.

தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும், தங்கள் பகுதி உதவிவேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் பயனடையலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News