உள்ளூர் செய்திகள்

முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா

Published On 2022-08-06 09:06 GMT   |   Update On 2022-08-06 09:06 GMT
  • பெண்களுக்கு தாலி மற்றும் வளையல் இலவசமாக வழங்கப்பட்டது
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளி விழா நடைபெற்றது.

இதில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. ஆடி வெள்ளியில் ஸ்ரீமுத்து மாரியம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர்.

இந்த அலங்காரத்தை காண சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சிறுவர்கள் பெண்கள் மற்றும் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் முன்னிட்டு கலந்து கொண்ட திருமண ஆன பெண்களுக்கு தாலி மற்றும் வளையல் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆடி வெள்ளி விழா முன்னிட்டு வாணவேடிக்கை நடைப்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சக்திவேல் மற்றும் சந்தைக்கோடியூர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags:    

Similar News