உள்ளூர் செய்திகள்

சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில் ஆடி வெள்ளி விழா

Published On 2022-07-23 09:14 GMT   |   Update On 2022-07-23 09:14 GMT
  • சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது
  • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளி விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

ஆடி முதல் வெள்ளி விழா முன்னிட்டு முத்து மாரியம்மனை சரஸ்வதி அலங்காரம் செய்திருந்தனர். இந்த அலங்காரத்தை காண சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் சக்திவேல் மற்றும் சந்தைக்கோடியூர் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News