உள்ளூர் செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து

Published On 2023-06-03 08:59 GMT   |   Update On 2023-06-03 08:59 GMT
  • 4 பேர் படுகாயம்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை :

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி வளர்மதி (வயது 40), கோவிந்தராஜ் (34), குணசேகரன் (28), அசோக் மனைவி பிரியா (23) ஆகியோர் பச்சூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.

நேற்று செங்கல்கள் ஏற்றிக் கொண்டு வெலக்கல்நத்தம் பகுதிக்கு டிராக்டரில் சென்றார். வண்டியை அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி ெசன்றார்.

செங்கலை இறக்கிவிட்டு வீடு திரும்பிய போது சுண்ணாம்புகுட்டை கிராமம் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டரில் பயணித்த 4 பேரும் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சை க்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News