உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் நந்தியப்பன் (வயது 30) என தெரியவந்தது.
இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து போலீசார் நந்தியப்பனை கைது செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.