உள்ளூர் செய்திகள்

நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2023-08-04 15:17 IST   |   Update On 2023-08-04 15:17:00 IST
  • சோதனையில் சிக்கினார்
  • போலீசார் விசாரணை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டை யாட நாட்டுத்துப்பாக்கியை சிலர் பதுக்கி வைத்திருந்தப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நன்னேரி பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் சோதனை செய்த போது உரிய உரிமம் இல்லாமல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிந்து.

உடனடியாக நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் போலீசார் பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News