உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி

Published On 2023-06-22 14:55 IST   |   Update On 2023-06-22 14:55:00 IST
  • நமக்கு நாமே திட்டத்தில் வழங்கப்பட்டது
  • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி ராஜாஸ்தான் சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நகரமன்றத் தலைவர் உமாசிவாஜி கணேசனிடம் சங்க நிர்வாகிகள் ரஞ்சித்குமார், தேஜ்ராஜ், மதன்லால், உமாராம், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வசந்தி, நகர கூட்டுறவு வங்கி தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News