உள்ளூர் செய்திகள்

மது கடத்திய 4 பேர் கைது

Published On 2023-06-01 09:40 GMT   |   Update On 2023-06-01 09:40 GMT
  • போலீசார் சோதனையில் சிக்கினர்
  • 230 பாக்கெட்டுகள் பறிமுதல்

வாணியம்பாடி:

வாணியம்பாடி நியூடவுன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதி வேகமாக சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் கடத்தி வந் தது தெரிய வந்தது.

விசாரணையில் காரில் வந்தவர்கள் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (வயது 20), குமரன் (24), மைக்கேல் (20), கதிர்வேல் (20) என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மது பாக்கெட்டுக் களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து 230 மது பாக் கெட்டுகளை போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்ப திவுசெய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News