உள்ளூர் செய்திகள்
- சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
- அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம்முகாமை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.டி.ஆர். செந்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
உடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.