உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2022-06-29 12:20 GMT   |   Update On 2022-06-29 12:20 GMT
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • உபகரணங்கள் பறிமுதல் செய்தனர்.

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் .

அப்போது பச்சூர் அருகே உள்ள ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில்

போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இது சம்பந்தமாக பச்சூர் பகுதியில் உள்ள ஆற்றில் மணல் எடுத்து கொண்டு இருந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து மணல் அள்ளி கொண்டு இருந்த உபகரணங்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News