உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் செயின் பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2023-05-29 13:15 IST   |   Update On 2023-05-29 13:15:00 IST
  • கேமரா காட்சிகள் ஆய்வு
  • போலீசார் விசாரணை

ஆம்பூர் :

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கிருஷ்ணவேணி (வயது 68). இவர் சம்பவத்தன்று மாரப்பட்டு பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 24) மற்றும் ராகுல் (23) ஆகியோர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து கிருஷ்ணவேணி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சதீஷ் மற்றும் ராகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செயினை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News